Thursday, March 19, 2009

ஸ்... யாரும் சிரிக்கக்கூடாது.

கலைஞர் : மூன்றாவது அணி மூன்றாவது கண் போன்றது.

ஜெயலலிதா : மூன்றாவது கண் என்பது சிவபெருமானின் நெற்றி்க்கண்ணை குறிக்கும். நெற்றிக்கண் மூடியிருக்கும் வரைதான் தவறு செய்வோருக்கு பாதுகாப்பு. நெற்றிக்கண்ணை திறந்துவிட்டால், எதிரேயுள்ளவர்கள் எரிந்து சாம்பலாகிப்போவார்கள்.

கலைஞர் : மூன்றாவது கண்ணை பெரியார் வழியில் வந்தவர்கள் யாரும் நம்பமாட்டார்கள்.

இல.கணேசன்: தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ விஜய்காந்த் கூட்டணி வைத்தால் அவரது தனித்தன்மையை இழந்துவிடுவார்.தனித்து நின்றால் வாக்கு வங்கியை குறைந்துவிடும். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்றால் மட்டுமே இரண்டையும் காப்பாற்ற முடியும்.

நல்லக்கண்ணு: அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் 7 தொகுதிகளை கேட்டுள்ளோம்.

1 comment:

Anonymous said...

இப்படிச் சொன்னா எப்படி? எங்களால சிரிக்காம இருக்க முடியலையே...