1. கவிஞர் அருணாசல சிவா அவர்களின் பொன்விசிறி அய்க்கூ நூல் வெளியீட்டு விழா.
நாள் : 31.5.09 ஞாயிற்று கிழமை.
நேரம் : காலை 10 மணி.
இடம் : ஸ்ரீனிவாசா சாஸ்திரி ஹால்( ரானடே நூலகம்),
லஸ் கார்னர்,(காமதேனு திரையரங்கம் எதிரில்), சென்னை- 4
தலைமை : பேராசிரியர் முகிலை இராசபாண்டியன், மாநில கல்லூரி, சென்னை- 5
வரவேற்புரை : வசீகரன்(பொதிகை மின்னல் ஆசிரியர்)
சிறப்புரை : ஓவியக்கவிஞர் அமுதபாரதி
மற்றும் கிரிஜா மணாளன், கவிஞர் அ.கெளதமன், கவிஞர் நாணற்காடன், கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி, கவிஞர் இளையகவி சலாமத்அலி
(இந்நிகழ்வில் நானும், என் நண்பர் பாரதிமோகனும் கலந்து கொள்கிறோம். எனவே தாங்களும் கலந்து கொள்ள அழைக்கிறேன்)
2. கவிஞர் வாசல் பட்டு இராசபாரதியின் எழுதுகோலின் விழுதுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா.
நாள்: 31.05.09 ஞாயிற்று கிழமை.
நேரம் : காலை 9.30 மணி.
இடம் : இந்திராநகர் இளைஞர் விடுதி (வாட்டர் டேங் அருகில்)அடையாறு பணிமனை நிறுத்தம், சென்னை - 600 020
வரவேற்புரை : கவிஞர் சொர்ணபாரதி(கல்வெட்டு பேசுகிறது இதழாசிரியர்)
தலைமை: பாரதி சுராஜ், நிறுவனர், பாரதி கலைக் கழகம்.
நூல் வெளியீடு : கலைமாமணி கவிக்கோ அப்துல் ரகுமான்.
மற்றும் பலர்.
ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறன்.
Monday, May 25, 2009
Saturday, May 16, 2009
வட்டங்கள் (வட்டத்திற்குள் பெண்)

வட்டத்திற்குள் பெண் என்ற கவிதை எழுத திகழ்மிளிர் என்னையும் அழைத்திருந்தார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. இக்கவிதை 'காற்றில் மிதக்கும் ஆகாயம்' என்ற கவிதைத்த தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. அதை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்...
வட்டத்தைவிட்டு
வெளியேற வேண்டுமெனில்
தாண்டிச்ச செல்ல
துணிவு வேண்டும்
இல்லையேல்
அடைபட்டு கிடக்கவேண்டும்
தயக்கங்களால்
தாமதிக்க நேரிட்டது
இப்போது
தாண்டவும் முடியாமல்
சிறைப்படவும் முடியாமல்
வட்டங்களும்
வாழ்க்கையும்
- அ.கார்த்திகேயன், சேலம்
போன்: 9952722942
Labels:
கவிதை
Thursday, May 7, 2009
கஜல் கவிதைகள்
என் இதயத்தை
உன்னிடம் யாசிக்கிறேன்
சாபத்தையேனும்
வரமாகக்கொடு
****************
காதலைப்போல்
இதயத்திற்கு
இன்பமுமில்லை, வலியுமில்லை
************
உன்னைச்
சொற்களில் தேடுகிறேன்
நீயோ
மெளனத்தில்
ஒளிந்திருக்கிறாய்
*************
வண்ணங்களின்
கனவே!
உன்நிழல்
என்
மரணத்தின்மீது
விழுகிற வெளிச்சம்
அக்னி சொரூபம்
என் காதல்
நீ வந்து
அணைக்கக்கூடாதா
- கோ.பாரதிமோகன்
என் முகம் பார்க்க இங்கே க்ளிக்கவும்.
உன்னிடம் யாசிக்கிறேன்
சாபத்தையேனும்
வரமாகக்கொடு
****************
காதலைப்போல்
இதயத்திற்கு
இன்பமுமில்லை, வலியுமில்லை
************
உன்னைச்
சொற்களில் தேடுகிறேன்
நீயோ
மெளனத்தில்
ஒளிந்திருக்கிறாய்
*************
வண்ணங்களின்
கனவே!
உன்நிழல்
என்
மரணத்தின்மீது
விழுகிற வெளிச்சம்
அக்னி சொரூபம்
என் காதல்
நீ வந்து
அணைக்கக்கூடாதா
- கோ.பாரதிமோகன்
என் முகம் பார்க்க இங்கே க்ளிக்கவும்.
Labels:
கஜல் கவிதை
Subscribe to:
Posts (Atom)