Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, August 13, 2010

கவிதை'கள்'

பூக்களின் காதில்
ரகசியம் சொல்லி
வெகுமதியாய்
தேன்துளி வாங்கும்
வண்ணத்துப்பூச்சி!
- மித்ரா

**********************
என் கவிதைகளில்
காதலை விதைக்கத் துணிவின்றி
மொத்த விதைகளையும்
சேமித்துக் கொண்டிருக்கிறேன்
மௌன குகைக்குள்...
சுற்றங்களின் சந்தேகம்
என் மேல்  முளைத்துவிடும் என்ற அச்சத்தில்!
- ரம்யா

*********************
தேவதைகளை சந்திக்கவே
அவரவர் தவமிருக்கையில்
எனக்கு மட்டும் அதை
பரிசாக கொடுத்தது
காதல்!
- முத்து ஆனந்த்

*******************

பெற்றவர் காப்பகத்தில்
காக்கைக்கு
கைப்பிடிச் சோறு
- தம்பி

இது நான் ரசித்த கவிதைகள். உங்கள் பார்வைக்காக....

Sunday, January 3, 2010

ஒரு கவிதை, ஒரு அய்க்கூ...


ஒரு கவிதை
விலைவாசி உயர்வு
அகவிலை கேட்டு
போராடும் அலுவலர்கள்
அமைதியாய் நகரும்
பிச்சைக்காரன்
••••••••••••
அய்க்கூ
மரங்களற்ற சாலை
நிழல் தருகிறது
புதிய பாலங்கள்
••••••••••••
குடந்தை அன்புமணி.

Monday, June 29, 2009

அய்க்கூ கவிதைகள் (29.6.2009)



குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடும்ப ரகசியம்

*************

தூசு பறக்காமல்
தரையை பெருக்குகிறது
மரத்தின் நிழல்

**************

தனித்த இரவுகளில்
பூத்துக் கிடக்கின்றன
கண்கள்

இங்கும் என்னை காணலாம்...!

Tuesday, June 23, 2009

அய்க்கூ கவிதைகள் (24.6.2009)

அந்திபொழுது
கூடுதிரும்பும் பறவைகள்
சலசலக்கும் மரம்

*************

கூட்டம் போட்டு
பயனற்று போயின
கலையும் மேகங்கள்

*************

மகளிர் உரிமை
மீட்டுக் கொடுத்தது
பொருளாதாரச் சூழல்

உரையாடல் சிறுகதை போட்டிக்கான எனது கதை படிக்க இங்க க்ளிக்கவும்!

Friday, April 10, 2009

அய்க்கூ கவிதைகள்


அழகிய வலை
பின்னிக் காத்திருக்கும்
சிலந்தி

***********

வலிக்காதா
ஒற்றைக்காலில் நிற்கும்
நடராசனே!

************

மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்

************
ஆயுள்முழுக்க
ஆடைமாற்றவேயில்லை
வண்ணத்துப்பூச்சி

Monday, March 23, 2009

அய்க்கூ கவிதைகள்


அந்தி சரியச் சரிய
தென்படுகின்றன
புதிய முகங்கள்
**************

சூரியனாய் பிரகாசிக்கும்
பெண்ணின் சுதந்திரம்
மேற்குமுட்டும்வரை
**************

பழம்தின்று பசியாறிய
பறவையறியாது
எச்சத்தின் மதிப்பு
**************

எங்கோ தூரத்தில்
கேட்கிறது
ஒற்றைக் குயிலோசை