Showing posts with label அய்க்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label அய்க்கூ கவிதைகள். Show all posts

Tuesday, September 8, 2009

படித்ததில் பிடித்த அய்க்கூ



அலுவலகம் போகும் பெண்
நகம் வளர்க்கிறாள்
கூட்டமாகவே பேருந்து
- நாணற்காடன் (செ.பே - 9942714307)

போதைவஸ்து கசக்குகிறான்
உள்ளஙகையில் தேய்கிறது
ஆயுள்ரேகை
- ராமலிங்கம் (செ.பே.எண்- 9842277982)


நீ என்பது தனிமை
நான் என்பது முன்னிலை
நாம் என்பது படர்க்கை!
- ஞானசேகரன் (செ.பே.எண்- 9842579597)

Tuesday, August 25, 2009

அய்க்கூ கவிதைகள்

கிழிந்த புடவை
மறைத்து கட்டும் அம்மா
பாவம் தாவணிப்பெண்.

•••••••••••••••••

வேலிகள் தாண்டி
மேயப் பார்க்கின்றன
விழிகள்.

••••••••••••••••••

வரதட்சணை கொடுத்த அப்பா
மகிழ்ச்சியில் திளைத்தார்
கையில் பேத்தி
••••••••••••••
படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். இலக்கியா, தகவல் மலர் வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.

Thursday, August 6, 2009

படித்ததில் பிடித்த அய்க்கூ



பசியைப் போக்கியது
குருணைக் கஞ்சி
பாவம் கோழிகள்

- பவுல்ராஜ், புதுகை
தொ. பே எண் : 9994703318

அக்னி, வாயு, ஈசான மூலை
அடகில் கிடக்கிறது
சொந்த மூளை

- ராசி. கண்மணி ராசா.
செ. பே. எண்: 9245317602

ஜன்னல் வழியே
கைநீட்டும் குழந்தைகள்
வெளியே மழை

- நாணற்காடன், ராசிபுரம்.
செ. பே. எண்: 9942714307

கோயில் மணியோசை
பரவசத்தில் மக்கள்
கலவரமாய் புறாக்கள்

- கன்னிக்கோயில் ராஜா, சென்னை.
செ. பே. எண்: 9841236965

நன்றி : அய்க்கூ கவிதைகள் 'கன்னிக்கோவில் ராஜா' அவர்களின் எஸ்.எம்.எஸ். அய்க்கூ இதழிலிருந்து...