Thursday, January 29, 2009

ஈழப்பிரச்சினையை கண்டித்து தமிழக வாலிபர் தீக்குளித்து மரணம்.

ஈழத்தில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவிக்கும் இராஜபக்சே அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடந்துவருகிறது. மனித சங்கிலி போராட்டம், ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம் என்று அரசியல், சினிமாதுறையினர்,மாணவர்கள், பொதுமக்களும் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தி மத்திய , மாநில அரசுகளை முடுக்கிவிட்டு இந்திய அரசை போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். தமிழக மக்களின் தொடர் போராட்டத்தை கண்டு மசிந்த மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேனன் இலங்கை சென்று வந்தார். தற்போது பிரணாப் முகர்ஜியும் சென்று வந்துள்ளார். ஒவ்வொருவரும் சென்று வந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்நத வாலிபர் முத்துக்குமரன் சென்னையில் பணிபுரிந்து வந்தவர், ஈழப்பிரச்சனையை கண்டித்து இன்று (29.1.08)காலை 10.45 மணியளவில் சென்னை சாஸ்திரிபவன் முன்பாக தீக்குளித்தார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஈழத்தில் பலர் குண்டு வீசி கொல்லப்பட்டதை படித்தும், தொலைக்காட்சியில் பார்த்தும் வந்த தமிழக மக்களுக்கு இந்த மரணம் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும், மத்திய அரசும் நிலமையி்ன் தீவிரத்தை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாலிபருக்கு தமிழ் பிளாக்கர்ஸ் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்வவதோடு அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

Tuesday, January 27, 2009

இலங்கை - இந்திய அணி கிரிக்கெட் புறக்கணிப்போம்


இலங்கையில் போர் நடைபெற்று அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது இலங்கை அரசு.இலங்கைக்கு இந்திய அணிகள் கிரிக்கெட் விளையாடச் செல்லக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் குரல் கொடுத்தனர். ஆனால் யாவும் பயனற்று போய்விட்டது. ஒரு(மூன்று) நாள் போட்டியில் கலந்து கொள்ள இலங்கைக்கு பயணமானது இந்தியஅணி. (இதேபோல்தான் கார்கில் யுத்தம் நடைபெற்றபோதும் பாகிஸ்தானுடன் விளையாடச் சென்றது) இந்தியர்களாகிய நாம் நம் எதிர்ப்பைக் காட்ட இந்தியா/ இலங்கை அணி விளையாட்டை தொலைக்காட்சியில் பார்ககாமல் புறக்கணிப்போம்.

Wednesday, January 21, 2009

வருவாயை விட்டுத்தருவாரா கருணாநிதி?


முன்னாள் முதல்வர்கள் கொண்டுவரும் திட்டங்களை அடுத்து ஆள வருபவர்கள் நிறுத்தி வைக்கவோ அல்லது கிடப்பிலேயே போடத்தான் விரும்புவார்கள். ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் கருணாநிதி அவர்கள், முன்னாள் முதல்வர் கொண்டுவந்த 'மதுபான கடைகளை அரசே ஏற்று நடத்தும்' என்ற கொள்கையை மட்டும் இவரும் ஏற்றறுக் கொண்டார். காரணம்? கொட்டும் வருமானம் கோடிக்கணக்கில் அல்லவா!
(இன்னும் சில 'தொழில்'கள் கூட இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு வைத்திருக்கிறார்களே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டும்.)
திடீரென 'ஞானதோயம்' வ்நத ராமதாஸ் அவர்கள் 'பூரண மதுவிலக்கு' கொள்கையை உயர்த்திப்பிடித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்காக முதல்வரை அடிக்கடி சந்தி்த்தும் வருகிறார்.
இந்நிலையில் 'கள்' இறக்க அனுமதி வேண்டி விவசாயிகள் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு சரத்குமாரின் ச.ம.க. உட்பல சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அடிக்கடி 'உள்ளேன் அய்யா' என என்ட்ரி கொடுக்கும் காங்கிரஸ் கட்சியினர் 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். முழு மதுவிலக்கு காங்கிரஸ் அடிப்படை கொள்கை. எனவே இதை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்காக நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்களுக்காக விவசாய கடனை மத்திய அரசும், மாநில அரசும் தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகள் 'கள் ' இறக்குவதை தவிர்த்து, பதநீர் உற்பத்தியை பெருக்கலாம். இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 'பூரண மதுவலிலக்கு' இல்லை" என்கிறார் கருணாநிதி.விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.
இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

Friday, January 16, 2009

இலங்கைத் தமிழரின் இன்னல் நிலைப்பாடும், எதிர்பார்ப்புகளும்.







இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி திருமாவளவன் செங்கல்பட்டு அருகே இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முதல்வர் கலைஞர் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பங்களிப்பு பற்றி கூறி, திருமாவளவன் அவசரப்பட்டு தன்னிச்சையாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்றும் இந்திய அரசின் போக்கினை இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்போம். அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். கொழும்பு சென்றுள்ள சிவசங்கரமேனன் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சேவை இனிதான் சந்திக்க இருக்கிறார். என்ன முடிவு ஏற்படும் என்பதை அறிய உலகமே காத்திருக்கிறது. ஈழத்தில் நடைபெறும் போரின் உக்கிரத்தை காட்டும் சில படங்கள்.... உங்கள் பார்வைக்கு!



Wednesday, January 14, 2009

இலங்கைப்பிரச்சனை இ(எ)ன்று தீரும்?


இலங்கையில் இன்றளவும் குண்டுகள் சத்தமும், ஈழத்தமிழர்களி்ன் அழுகுரலும் ஓயவில்லை. அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும்,உரத்து குரல் கொடுத்தாலும் போர் ஓயவில்லை. தமிழக முதல்வரும் எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிக்கை வி்ட்டார்.மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல், அடையாள உண்ணாவிரதம் போராட்டம் என்று எவ்வளவோ செய்து பார்த்தாயிற்று. மத்திய அரசு ராணுவ உதவி அளிக்கக்கூடாது என்றும், போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் இயங்கங்களும் உரத்து குரல் கொடுத்து வருகிறார்கள். திரைத்துறையினரும் போராட்டக்களத்தில் குதித்து தன் ஆதரவை தெரிவித்ததை நாடு அறியும். உலகமே வியக்கும் வண்ணம் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலித்தாலும் மத்திய அரசு அவசர கதியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. சென்னை வந்த இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சம்பந்தன் அவர்கள் கூறும் போது ''4 லட்சம் தமிழர்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இதே நிலை நீடித்தால் 5 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். அதைத்தான் இலங்கை அரசு விரும்புகிறது''. என்கிறார். திருமாவளவன், கீ.வீரமணி, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் சமீபத்தில் கலைஞரை சந்தி்த்து மீண்டும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டி சந்தித்தார்கள்.பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று திருமாவளவன் கூறினார். சந்திப்பிற்கு பிறகு கலைஞர் பிரதமரிடம் மீண்டும் எடுத்துரைப்பேன். நம்மால் போரை நிறுத்த முயன்றால் நமக்கு பெருமைதான் என்றார்.மத்திய அரசு இதோ இதோ என்று போக்கு காட்டி வந்தது. இன்று(15.1.2009) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசங்கரமேனன் கொழும்பு செல்கிறார். இலங்கையில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக செயத்திகள் வெளியாகியுள்ளன. தமிழர் புத்தாண்டு பிறந்துள்ள இந்நன்னாளில் ஈழத்தமிழரின் வாழ்விலும் மகி்ழ்ச்சி நிலவ வேண்டும் என்பதே நம் ஆவல்.

Wednesday, January 7, 2009

லாரிகள் வேலை நிறுத்தத்தால் யாருக்கு பாதிப்பு?


லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பு லாரி உரிமையாளர்களும், மத்திய அரசுக்கும் மட்டுமா? இல்லையே... தென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்திலேயா அண்டகட்டும் என்பது முதுமொழி. ஆனால் இன்றைய நாளில் அந்த பொன்மொழி பொய்யாகிப் போனது. (இந்தப் பொன்மொழிக்கு வேறு அர்த்தம் உண்டா என்று தெரிந்தவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்படும்.) லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அரசுக்கும் , லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு என்றால் அவர்கள் இருவரும் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். தமிழ்நாட்டில் சுமார் 4000 லாரிகள் ஓடுவதாக ஒரு உத்தேச கணக்கு சொல்கிறது. ஒரு லாரிக்கு இரண்டு பேர் என்றால் சுமார் எட்டாயிரம் தொழிலாளிகள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளிகள், சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் லாரி போக்குவரத்தை நம்பியுள்ள விவசாயிகள், வணிகர்கள், இவர்களை நம்பியுள்ள பொதுமக்கள் என்று பட்டியல் நீள்கிறது. பாதிப்புகளில் சில...திருப்பூரில் உற்பத்திசெய்த பனியன்கள் தேக்கம்.நாமக்கல் மாவட்டங்களில் முட்டைகள் தேக்கம்.பொங்கல் நெருங்கி வரும் வேளையில் பரமக்குடியில் வெல்லம் தேக்கம்.காய்கறிகள் வரத்து பாதிப்பு.இந்நிலையில் நாளைமுதல் பால், தண்ணீர் லாரிகளும் ஓடாது என்று அறிவிப்பால் எவ்வளவு பாதிப்புகள் நேரும் என்று நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. (தஞ்சை மாவட்டங்களில் மட்டும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. பொங்கல் திருவிழா நெருங்கி வருவதால் விவசாயிகளை மனதில் கொண்டு லாரிகளை இயக்குவதாக அவர்கள் கூறியிள்ளனர்.) பெட்ரோல் விலையை மட்டும் நள்ளிரவு முதலே உயர்த்தும் மத்திய அரசு டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்து வரும் வேளையில் உடனடி நடவடிக்கை எடுத்தால்தான் மக்களின் நன்மதிப்பை பெற முடியும். இல்லையென்றால் மக்களின் மௌனம் தேர்த-ல் எதிரொ-க்கும் என்பது வரலாறு மறுக்கமுடியாத உண்மை.பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும், சமையல் எரிவாயு விலை ரூபாய் 25 முதல் 30 வரை குறைக்கப்படும் என்றும் கூறிய பெட்ரோ-யத்துறை அமைச்சர், லாரி உரிமையாளர்களை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என்கிறார். எது எப்படியோ விரைவில் ஒரு சுமூகமான தீர்வு எட்டவேண்டும். அதுவே நாட்டுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது.

Monday, January 5, 2009

திருமங்கலம் இடைத்தேர்தல்


திருமங்கலம் இடைத்தேர்தல் வந்தாலும் வந்தது,அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாகிவிட்டன. மக்களுக்கும் திரும்பிய இடமெங்கும் பலத்த வரவேற்பு. திருமங்கலத்தில் நடப்பவற்றை பார்த்தால், வாக்காளர்கள் கொடுத்துவைத்தவர்களா... அல்லது பாவப்பட்டவர்களா என்பதே புரியவில்லை. தி.மு.க.மீது அ.தி.மு.கவும், அ.தி.மு.க.மீது தி.மு.க.வும் மாறி மாறி பழியைச் சொல்கிறார்கள். மற்ற கட்சிகளும் ஒழுங்கா என்று கேட்காதீர்கள். மக்களாகிய உங்களுக்குத் தெரியாததா! இடைத் தேர்தலை சீக்கிரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஏதோ அரசியல் சதி என்றளவுக்கு தி.மு.க. முதலில் அறிக்கை விட்டது. ஜெயலிதாவோ தேர்தலில் தோற்றுப்போவோம் என்ற பயத்தில் கருணாநிதி உளறுகிறார் என்றார். அதன்பிறகு தேர்தலை தடுக்க எதிர்கட்சிகள் என்ன தொந்தரவுகள் கொடுத்தாலும் தி.மு.க.வினர் கையைகட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அளவிற்கு கருணாநிதி பேசினார்.இப்போது தி.மு.க., அ.தி.மு.க. இருவரும் பணத்தை வாரி இறைப்பதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை கூறிவருகின்றனர். அந்தந்த கட்சிக்கு சார்பாக அவர்களின் சொந்த மீடியாவும் உழைக்கின்றன. இந்த நிலையில் பா.ம.க. யாருக்கும் அதரவு கொடுக்காமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளது. (ஜெயிக்கும் கட்சியுடன் நாடாளுமன்றக் கூட்டணி வருமோ!)தே.மு.தி.கவும் களத்தில் போராடி வருகிறது. கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்திக்கும் கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கிறது.தி.மு.க.கூட்டணியில் இதுவரை இருந்த இரு கம்யூனிஸ்ட்டுகளும் அ.தி.மு.க.விற்காக வாக்கு சேகரித்து வருகின்றன.முதன்முறையாக அழகிரியும், மு.க.ஸ்டாலினும் இணைந்தும் தேர்தலை சந்திக்கின்றனர். மீண்டும் தயாநித மாறன் தி.மு.க. கூடாரத்திற்குள் நுழைந்திருக்கிறார். பொங்கல் பரிசாக திருமங்கல மக்கள் தரும் வாக்கை வெல்லப்போவது யார்? பொறுத்திருங்கள்...