Thursday, May 5, 2011

மணல்வீடு...


உடைந்துவிடக்கூடியதல்ல
நாங்கள் கட்டிய மணல்வீடு
இது எங்கள்
மனங்களால் கட்டியது...
விடுமுறை முடிந்து
வீடு திரும்பும்போது
இதன் நினைவு கோட்டைகளை
எடுத்துச்சென்று
எங்கள் மன அடுக்குகளில் காப்போம்...
மறையாமல் வீற்றிருக்கும்
என்றும் இந்த மணல்வீடு...

- சூர்யநிலா, சேலம்.


 (பிருந்தாவனம் ஆசிரியர் குழு)


செல் :  9789507810

Tuesday, March 15, 2011

கவிதை

உன்னால் எப்பொழுதும்
தவறுதலாகவே
மொழிபெயர்க்கப்படுகிறது
யாரும் அறியாத
ஊமையின் கனவாய்
என் மௌனங்கள்

- P.K. ராஜேஸ்வரி

நன்றி- யாழிசை குறுஞ்செய்தி கவிதை இதழ்

உங்களுக்கும் குறுஞ்செய்தி வடிவில் கவிதை பெற
தொடர்பு கொள்ளுங்கள்- 99763 50636

Wednesday, February 16, 2011

படித்ததில் பிடித்தது

வசந்தத்தைத் தேடிய
வண்ணத்துப்பூச்சி ஒன்று
அலுத்துப்போய் அமர்ந்தது
மண்டையோட்டின் மீது...

- ஆம்பல் மாதவி