Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, May 5, 2011

மணல்வீடு...


உடைந்துவிடக்கூடியதல்ல
நாங்கள் கட்டிய மணல்வீடு
இது எங்கள்
மனங்களால் கட்டியது...
விடுமுறை முடிந்து
வீடு திரும்பும்போது
இதன் நினைவு கோட்டைகளை
எடுத்துச்சென்று
எங்கள் மன அடுக்குகளில் காப்போம்...
மறையாமல் வீற்றிருக்கும்
என்றும் இந்த மணல்வீடு...

- சூர்யநிலா, சேலம்.


 (பிருந்தாவனம் ஆசிரியர் குழு)


செல் :  9789507810

Monday, May 25, 2009

நிகழ்வுகள்

1. கவிஞர் அருணாசல சிவா அவர்களின் பொன்விசிறி அய்க்கூ நூல் வெளியீட்டு விழா.
நாள் : 31.5.09 ஞாயிற்று கிழமை.
நேரம் : காலை 10 மணி.
இடம் : ஸ்ரீனிவாசா சாஸ்திரி ஹால்( ரானடே நூலகம்),
லஸ் கார்னர்,(காமதேனு திரையரங்கம் எதிரில்), சென்னை- 4
தலைமை : பேராசிரியர் முகிலை இராசபாண்டியன், மாநில கல்லூரி, சென்னை- 5
வரவேற்புரை : வசீகரன்(பொதிகை மின்னல் ஆசிரியர்)
சிறப்புரை : ஓவியக்கவிஞர் அமுதபாரதி

மற்றும் கிரிஜா மணாளன், கவிஞர் அ.கெளதமன், கவிஞர் நாணற்காடன், கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி, கவிஞர் இளையகவி சலாமத்அலி
(இந்நிகழ்வில் நானும், என் நண்பர் பாரதிமோகனும் கலந்து கொள்கிறோம். எனவே தாங்களும் கலந்து கொள்ள அழைக்கிறேன்)

2. கவிஞர் வாசல் பட்டு இராசபாரதியின் எழுதுகோலின் விழுதுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா.

நாள்: 31.05.09 ஞாயிற்று கிழமை.
நேரம் : காலை 9.30 மணி.
இடம் : இந்திராநகர் இளைஞர் விடுதி (வாட்டர் டேங் அருகில்)அடையாறு பணிமனை நிறுத்தம், சென்னை - 600 020
வரவேற்புரை : கவிஞர் சொர்ணபாரதி(கல்வெட்டு பேசுகிறது இதழாசிரியர்)

தலைமை:
பாரதி சுராஜ், நிறுவனர், பாரதி கலைக் கழகம்.
நூல் வெளியீடு : கலைமாமணி கவிக்கோ அப்துல் ரகுமான்.
மற்றும் பலர்.
ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறன்.

Friday, February 13, 2009

காதலர் தினம் கொண்டாடப்போகிறீர்களா?


காதலர் தினம் கொண்டாடுவது ஒன்றும் பெரிதில்லை. எத்தனை காதலர்கள் வாழ்க்கையில் இணைகிறார்கள்.அப்படியும் இணைந்த காதலர்கள் எத்தனைபேர் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.
எனக்குத் தெரிந்த ஒருவர் காதலிக்கும் போது அந்த காதலிக்காக உருகு உருகென்று உருகினார். அந்தப் பெண்ணை ஒருநாள் பார்க்காவிட்டாலும் சாப்பிட மாட்டார். ஆனால், பெற்றோரை சம்மதிக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, பதிவு திருணம் செய்துகொள்ளவும் தைரியமில்லை. அந்தப்பெண்ணை மறந்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுவிட்டார். அந்தப் பெண்ணும் வேறொரு ஆடவணை திருமணம் செய்து கொண்டு விட்டார்.(அந்தப் பெண் அவருக்காக நிறைய நாட்கள் காத்திருந்தாள் என்பது உண்மை.)
அடுத்து மற்றொரு நண்பர். இவரும்கூட அந்தப் பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தார். அந்தப் பெண்ணையே இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். அப்புறம் என்ன என்கிறீர்களா? அவர்கள் வாழ்க்கையின் போக்குதான் சரியில்லை.(இத்தனைக்கும் அந்த நண்பருக்கு வருமானத்திற்கு குறைவில்லை.) இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வது, அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது, இருவரும், பிறந்த வீட்டுக்கு(தனிகுடித்தனம் இருக்கிறார்கள்) அடிக்கடி செல்வது இப்படியே போகிறது அவர்கள் வாழ்க்கை. இவர்கள் காதலித்தது குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள். இந்த ஐந்து வருடங்களில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதுதான் என்ன?
எங்கள் குடும்பத்தில் பெரும்பாலோர் காதல் திருமணங்கள்தான் செய்திருக்கிறோம்.(நான் உட்பட) எங்களுக்குள் சிற்சில சண்டைகள் வரும். அதுவெல்லாம் சில மணித்துளிகள்தான் நீடிக்கும். பிறகு சமாதானமாகிவிடுவோம். பின்பு அந்த சண்டையையே வைத்து கிண்டல்கூட பண்ணிக்கொள்வோம். காதலித்தோ, பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ எதுவானாலும் ஒருவரையொருவர் புரிந்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை.காதல் திருமணம் செய்வோர் எல்லோரும் காலமெல்லாம் காதலுடன் வாழ்க.