Monday, July 19, 2010

மழை நாளொன்றில்தானே..

மௌனம் பூண்டு கிடந்தது
காதல்
தன்னைப் பிரிந்து சென்ற
மழைக்காதலியின்
பரிசத் தீண்டல்கள்
கிட்டாத சோகத்தில்...

தன்னின் துயர கண்ணீர்களை
பெரும் அலையென
பிரசவித்துக் கொண்டிருந்தது...

நெடும் கூந்தலொன
விரிந்துகிடக்கும்
தனது கரைகளில்
கால்நனைத்து செல்லும்
காதலர்களை
மிகுந்த ஆதங்கத்துடன்
அது எட்டிப்பார்த்து
கண்ணீர் உகுத்துகிறது...

 பிறகு,
பெரும் மழையொன்று
கொட்டத் தொடங்குகிறது,

உன் விழியில்
நீர்பூக்க கண்டேன் தோழி...

ஒரு மழை நாளில்தானே
கொடும் கரமொன்று
உன்னையும் என்னையும்
பிரித்தது...?

நம்மிரு உடல்கள்
வேறு வேறு
உடல்களுக்கு உறுதி
செய்யப்பட்டது
மழை நாளொன்றில்தானே.. தோழி...

நீயும் நானும்
அதை
விழிகளிலிருந்து தருவித்து கொள்கிறோம்
அவ்வப்போது...
பெரும் கேவலுடன்..!
- சூரிய நிலா,
9789507810

Sunday, July 11, 2010

மண்வாசனைக் கவிதை

செவக்காடு உழுது
சீராக பாத்திகட்டி
கமலைத் தண்ணி எரச்சி
கடலைப் பயிறு
போட்டுவிட்டேன்...

தேனி சந்தையிலே
தேடி வாங்கிவந்து
தெக்காட்டு வயலிலே
தென்னங்கன்னு
நட்டு வச்சேன்...

அத்தை மக
ஒன்நெனப்பை
மனசுக்குள்ளே
ஊனி வச்சேன்...

கடலையும் பூத்து
காய்ப்புக்கு வந்துருச்சு...

கன்னு மரமாகி
கொலை கொலையா தள்ளிருச்சு...

நெஞ்சுக்குள்ளே
ஊனிவச்ச
ஒன் நெனப்பு விதை
மட்டும் தாண்டி
வேர்ப்புழு விழுந்து
வெட்டியா காய்ஞ்சிருச்சு...

- சங்கர பாண்டியன், (9952895010)
வடுகப்பட்டி.

நன்றி- ராகா குறுஞ்செய்தி கவிதை இதழ் (9786098440)

செவக்காடு- செம்மண் வயல்
கமலைத்தண்ணி- கிணற்று தண்ணீர்


Friday, July 2, 2010

கவிதை

தூரத்தில் விழும்
சன்னமான
இசைகேட்டு
லயிக்கிறேன் நான்...

விழித்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
சூனியத்தில் உறங்கிய
என் காலம்!
- யாழி.
செல் பேசி- 9976350636