


இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி திருமாவளவன் செங்கல்பட்டு அருகே இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முதல்வர் கலைஞர் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பங்களிப்பு பற்றி கூறி, திருமாவளவன் அவசரப்பட்டு தன்னிச்சையாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்றும் இந்திய அரசின் போக்கினை இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்போம். அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். கொழும்பு சென்றுள்ள சிவசங்கரமேனன் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சேவை இனிதான் சந்திக்க இருக்கிறார். என்ன முடிவு ஏற்படும் என்பதை அறிய உலகமே காத்திருக்கிறது. ஈழத்தில் நடைபெறும் போரின் உக்கிரத்தை காட்டும் சில படங்கள்.... உங்கள் பார்வைக்கு!




