Monday, June 29, 2009

அய்க்கூ கவிதைகள் (29.6.2009)



குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடும்ப ரகசியம்

*************

தூசு பறக்காமல்
தரையை பெருக்குகிறது
மரத்தின் நிழல்

**************

தனித்த இரவுகளில்
பூத்துக் கிடக்கின்றன
கண்கள்

இங்கும் என்னை காணலாம்...!

Tuesday, June 23, 2009

அய்க்கூ கவிதைகள் (24.6.2009)

அந்திபொழுது
கூடுதிரும்பும் பறவைகள்
சலசலக்கும் மரம்

*************

கூட்டம் போட்டு
பயனற்று போயின
கலையும் மேகங்கள்

*************

மகளிர் உரிமை
மீட்டுக் கொடுத்தது
பொருளாதாரச் சூழல்

உரையாடல் சிறுகதை போட்டிக்கான எனது கதை படிக்க இங்க க்ளிக்கவும்!