Tuesday, March 24, 2009

இது அய்க்கூ மாதிரி.

இது அய்க்கூ மாதிரி.(நல்லா கவனிங்க...இது அய்க்கூ மாதிரிதான். மாதிரி அய்க்கூ அல்ல...)

ஊர்மரியாதை யாருக்கு
சச்சரவில் சிறைவைப்பு
கோவிலுக்குள் சிலைகள்

***********

நள்ளிரவில்
வியர்வை குளியல்
மின்தடை

************

சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி

*********

காதல் தோல்வி
கெளரவம் கிடைத்தது
கவிஞன்

*********

அகராதிகள் பலபடித்தும்
அர்த்தம் புரியவில்லை
காதல்

**********

16 comments:

Raju said...

\\ஊர்மரியாதை யாருக்கு
சச்சரவில் சிறைவைப்பு
கோவிலுக்குள் சிலைகள்\\

அப்ப கோவிலுக்குள் சாமி இல்ல..சிலைகள்தான்.

\\நள்ளிரவில்
வியர்வை குளியல்
மின்தடை\\

நான் ஒரு வரி சேர்க்கின்றேன்.."ஆற்க்காட்டாருக்கு நன்றி"

\\சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி\\

அப்பட்டமான உண்மைண்ணே...

\\காதல் தோல்வி
கெளரவம் கிடைத்தது
கவிஞன்\\

ஹி..ஹி..ஹி..ஹி...

\\அகராதிகள் பலபடித்தும்
அர்த்தம் புரியவில்லை
காதல்\\

அருமை தலைவா...

மொத்ததில் அன்பு அன்புதான்...

Unknown said...

இது ஹைக்கூவில் வ்ருகிறது.


சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி

குடந்தை அன்புமணி said...

நன்றி டக்ளஸ்!

குடந்தை அன்புமணி said...

//கே.ரவிஷங்கர் said...
இது ஹைக்கூவில் வ்ருகிறது.


சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி//

ஒன்று தேறிச்சா! நன்றி தோழரே!

ஆ.சுதா said...

கடைசியை தவிற மற்றவைகள் எனக்கு பிடித்திருந்தன
//சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி// இது அதிலும் நன்று

குடுகுடுப்பை said...

சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி

இது நல்ல செய்தி. மரங்கள் வெட்டப்படுவது, வளர்க்கபடுவதில்லை என்பதை தாங்கி வருவதால் என் ஓட்டு இதற்கே

வேத்தியன் said...

எல்லாமே நன்றாக இருக்கு...
கொஞ்சம் வேலை...
பிறகு வந்து படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன்...
:-)

தேவன் மாயம் said...

ஊர்மரியாதை யாருக்கு
சச்சரவில் சிறைவைப்பு
கோவிலுக்குள் சிலைகள்///

வாருங்கள் கவிஞரே!!

தேவன் மாயம் said...

நள்ளிரவில்
வியர்வை குளியல்
மின்தடை//
அருமை குளியல்!

தேவன் மாயம் said...

காதல் தோல்வி
கெளரவம் கிடைத்தது
கவிஞன்///

யாருக்கப்பு/

குடந்தை அன்புமணி said...

..thevanmayam said...
காதல் தோல்வி
கெளரவம் கிடைத்தது
கவிஞன்///

யாருக்கப்பு//

நம்ம நண்பர்கள் சிலபேர் அப்படித்தான் திரியறாங்க.

ச.முத்துவேல் said...

/சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி/
இது ஹைகு மாதிரியில்ல. ஹைகுதான். நல்லாயிருக்கு.

புதியவன் said...

//காதல் தோல்வி
கெளரவம் கிடைத்தது
கவிஞன்//

இந்த ஹைக்கூ நல்லா இருக்கு...

ஆதவா said...

உங்களது கவித்திறனை இங்கே காண்கிறேன் அன்பு... இது தெரியாமப் போச்சே இத்தனை நாளா.... எல்லாமே அருமை!

பழமைபேசி said...

வாழ்த்துகள்! நல்லா இருக்கு எல்லாமே!!

பழமைபேசி said...

thamilish???