Thursday, April 2, 2009

கவிதை(கள்) - 2



எதிர்பாராத திருப்பங்களில்
சந்தித்துக்கொள்கிறோம்
நீயும் நானும்...

வழிவிட்டு விலகி
நடக்க விரும்பி
இருவரும்
இடவலமாய் திண்டாட
தடுமாறுகிறது மனசு!

*******************

நம் சந்திப்பு நிகழாத நாட்களில்
சேமிக்கப்படுகின்றன
செலவழிக்கப்படாத
உனக்கான முத்தங்கள்!

10 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை அன்பு!

Raju said...

ம்ம்ம்.. ந‌டத்துங்க.. நடத்துங்க!

ஆ.சுதா said...

இரண்டுமே அழகு+அருமை
//நம் சந்திப்பு நிகழாத நாட்களில்
சேமிக்கப்படுகின்றன
செலவழிக்கப்படாத
உனக்கான முத்தங்கள்! //
மிகவும் லயிக்க வைத்தது.
அருமையான கவிதைகள் அன்புமணி

தேவன் மாயம் said...

போட்டுத்தாக்குங்க!!!

தேவன் மாயம் said...

காதல் கவிஞரே செய்யுங்க!!

தேவன் மாயம் said...

முத்தமெல்லாம் ரொம்ப சேமிக்கக்கூடாது!!

kuma36 said...

///நம் சந்திப்பு நிகழாத நாட்களில்
சேமிக்கப்படுகின்றன
செலவழிக்கப்படாத
உனக்கான முத்தங்கள்! ////

அடடா அருமை அருமை.

ஆதவா said...

அழகு அழகு!!!! அன்புமணி!

இடவல திண்டாட்டம்.. மிக அருமை!!

சேமிக்கப்படும் முத்தங்கள்.... அதிலும் அருமை!! மிக அற்புதமான கவிதை அன்புமணி!!! இதைப் போன்றே தொடர்ந்து எழுதுங்கள்.. தபூ சங்கர் போல காதலுக்கான நல்ல இடத்தை நீங்கள் தக்க வைக்க முடியும்!!!

புதியவன் said...

//நம் சந்திப்பு நிகழாத நாட்களில்
சேமிக்கப்படுகின்றன
செலவழிக்கப்படாத
உனக்கான முத்தங்கள்!//

சேமிக்கப்படும் முத்தமெல்லாம்
பின் நாளில் செலவளிப்பதற்காகத் தான்
கவிதை அழகு நண்பா...

anujanya said...

:)