Thursday, May 7, 2009

கஜல் கவிதைகள்

என் இதயத்தை
உன்னிடம் யாசிக்கிறேன்

சாபத்தையேனும்
வரமாகக்கொடு

****************
காதலைப்போல்
இதயத்திற்கு
இன்பமுமில்லை, வலியுமில்லை

************

உன்னைச்
சொற்களில் தேடுகிறேன்
நீயோ
மெளனத்தில்
ஒளிந்திருக்கிறாய்

*************

வண்ணங்களின்
கனவே!
உன்நிழல்
என்
மரணத்தின்மீது
விழுகிற வெளிச்சம்

அக்னி சொரூபம்
என் காதல்
நீ வந்து
அணைக்கக்கூடாதா

- கோ.பாரதிமோகன்


என் முகம் பார்க்க இங்கே க்ளிக்கவும்.

9 comments:

ஆ.சுதா said...

நல்ல அறிமுகம்
|உன்னைச்
சொற்களில் தேடுகிறேன்
நீயோ
மெளனத்தில்
ஒளிந்திருக்கிறாய்|
இது மிகவும் பிடித்திருந்தது.

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள் நண்பரே, யூத்ஃபுல் விகடனில் உங்கள் கவிதை பிரமாதம். அருமையா எழுதியிருக்கீங்க

Anonymous said...

வரத்தை சாபமாக கேட்கும் விந்தை இந்த காதலில் மட்டுமே....வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

காதலில் எல்லாமே விந்தைதான்.. நல்ல கவிதைகள்... வாழ்த்துக்கள்.. :-)

புதியவன் said...

நான்கு கவிதைகளும் அழகு...

முதல் கவிதையும் மூன்றாவது
கவிதையும் வெகு அழகு...

வாழ்த்துக்கள் அன்புமணி...

ஆதவா said...

நல்லா இருக்குங்க.
நல்ல பகிர்வு!! அறீமுகம்..

தமிழ் said...

அருமை

பழமைபேசி said...

வாசித்தேன் - பின்
முகமும் கண்டேன்!!

வாழ்த்துகள்!!!

Raju said...

அருமையை தவிர வேறென்ன சொல்ல...!