Sunday, January 3, 2010

ஒரு கவிதை, ஒரு அய்க்கூ...


ஒரு கவிதை
விலைவாசி உயர்வு
அகவிலை கேட்டு
போராடும் அலுவலர்கள்
அமைதியாய் நகரும்
பிச்சைக்காரன்
••••••••••••
அய்க்கூ
மரங்களற்ற சாலை
நிழல் தருகிறது
புதிய பாலங்கள்
••••••••••••
குடந்தை அன்புமணி.

11 comments:

butterfly Surya said...

Welcome back..

வாழ்த்துகள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

குடந்தை அன்புமணி said...

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பட்டர்பிஃளை சூர்யா. தொடர்ந்த தங்கள் ஆதரவுக்கும் நன்றி.

கடைக்குட்டி said...

அய்க்கூ பாப்பு..

ச்சே.. டாப்பூ.... :-)

குடந்தை அன்புமணி said...

நன்றி மாப்பூ...

"உழவன்" "Uzhavan" said...

அய்க்கூ நல்லாருக்கு.

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்..

Anonymous said...

ஹைக்கூ எப்பவும் போல நல்லாயிருக்கு...எங்க போயிட்டீங்க மணி ரொம்ப நாளாச்சே....?

குடந்தை அன்புமணி said...

நன்றி... உழவன், கமலேஸ்

குடந்தை அன்புமணி said...

//தமிழரசி said...

ஹைக்கூ எப்பவும் போல நல்லாயிருக்கு...எங்க போயிட்டீங்க மணி ரொம்ப நாளாச்சே....?//

புத்தக கண்காட்சி இந்த வருடம் டிசம்பரில் ஆரம்பமானதால் புத்தக தயாரிப்பு (அலுவலக) பணியில் ஈடுபட்டிருந்ததால் வலைப்பக்கம் வர முடியவில்லை. இனிமே வழக்கம்போல் வருவேன். மிக்க நன்றி தோழி...

Unknown said...

அன்புமணி...

வாழ்க்கை என்பது போராட்டம் என்பது புரிந்துவிட்டால், யாரும் பிச்சை எடுக்க வாய்ப்பில்லை.

உலக முதலாளிகளும்...
சுரன்டல் காரர்களும்,
ஓட்டு பொறுக்கிகளும்.....
ஞானோபதேசம் செய்பவர்களும்..

பேசாமல் நகரும் பிச்சைக்காரர்களைத்தான் தங்கள் மூலதனமாக எதிர்பார்கிறார்கள். அகவிலைப்படிக்காக போராடும் ஊழியர்களை அல்ல.

- சென்னைத்தமிழன்

குடந்தை அன்புமணி said...

//செம்புலம் said...
அன்புமணி...

வாழ்க்கை என்பது போராட்டம் என்பது புரிந்துவிட்டால், யாரும் பிச்சை எடுக்க வாய்ப்பில்லை.

உலக முதலாளிகளும்...
சுரன்டல் காரர்களும்,
ஓட்டு பொறுக்கிகளும்.....
ஞானோபதேசம் செய்பவர்களும்..

பேசாமல் நகரும் பிச்சைக்காரர்களைத்தான் தங்கள் மூலதனமாக எதிர்பார்கிறார்கள். அகவிலைப்படிக்காக போராடும் ஊழியர்களை அல்ல.

- சென்னைத்தமிழன்//

உங்கள் பார்வை வேறு. எனது பார்வையில் பிச்சைக்காரர்களுக்கு நாம் போடும் பைசாக்களிலும் உயர்வு வேண்டும் என்பதாகத்தான் எழுதியிருக்கிறேன். தங்களின் நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கு மிக்க நன்றி.