Monday, July 19, 2010

மழை நாளொன்றில்தானே..

மௌனம் பூண்டு கிடந்தது
காதல்
தன்னைப் பிரிந்து சென்ற
மழைக்காதலியின்
பரிசத் தீண்டல்கள்
கிட்டாத சோகத்தில்...

தன்னின் துயர கண்ணீர்களை
பெரும் அலையென
பிரசவித்துக் கொண்டிருந்தது...

நெடும் கூந்தலொன
விரிந்துகிடக்கும்
தனது கரைகளில்
கால்நனைத்து செல்லும்
காதலர்களை
மிகுந்த ஆதங்கத்துடன்
அது எட்டிப்பார்த்து
கண்ணீர் உகுத்துகிறது...

 பிறகு,
பெரும் மழையொன்று
கொட்டத் தொடங்குகிறது,

உன் விழியில்
நீர்பூக்க கண்டேன் தோழி...

ஒரு மழை நாளில்தானே
கொடும் கரமொன்று
உன்னையும் என்னையும்
பிரித்தது...?

நம்மிரு உடல்கள்
வேறு வேறு
உடல்களுக்கு உறுதி
செய்யப்பட்டது
மழை நாளொன்றில்தானே.. தோழி...

நீயும் நானும்
அதை
விழிகளிலிருந்து தருவித்து கொள்கிறோம்
அவ்வப்போது...
பெரும் கேவலுடன்..!
- சூரிய நிலா,
9789507810

7 comments:

அ.முத்து பிரகாஷ் said...

//
நம்மிரு உடல்கள்
வேறு வேறு
உடல்களுக்கு உறுதி
செய்யப்பட்டது
//
திருமணம் என்பதற்கு அருமையான விளக்கம் தோழர் !
கவிவரியின் குரலில் நிலா உருகி வழிகிறது மழை நாளில் !!

ஹேமா said...

காதலும் ஒரு தவிப்புமாய் கவிதை கரைகிறது.நன்று.

குடந்தை அன்புமணி said...

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நியோ

குடந்தை அன்புமணி said...

//ஹேமா said...
காதலும் ஒரு தவிப்புமாய் கவிதை கரைகிறது.நன்று.//

அதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது... தங்கள் வருகைக்கு நன்றி தோழி...

Anonymous said...

கவிதை அருமை.
வாழ்த்துக்களுடன்..
கி.சார்லஸ்
haikukudil.blogspot.com
ckicharles@yahoo.com

கி.சார்லஸ் said...

கவிதை அருமை.
வாழ்த்துக்களுடன்..
கி.சார்லஸ்
haikukudil.blogspot.com
ckicharles@yahoo.com

கி.சார்லஸ் said...

கவிதை அருமை.
வாழ்த்துக்களுடன்..
கி.சார்லஸ்
haikukudil.blogspot.com
ckicharles@yahoo.com